Posts

திருப்பதி தரிசனமும் திட்டமிடலும்

தற்போது கொரோனா பிரச்சினை கிட்டத் தட்ட முடிவடைந்து உள்ள நிலையில், 2 ஆண்டுகளாக திருமலை பெருமாளை தரிசிக்க இயலாதவர்கள் அனைவரும் தற்போது செல்ல முயற்சிக்கிறோம். 2-3 மாதங்களுக்கு முன்னரே இணைய தளம் மூலம், 300 ரூ டிக்கட் அல்லது சர்வ தரிசன டிக்கெட் எடுத்துக் கொள்வது நல்லது. இப்படி இல்லாமல் திருமலை வந்தால் நேரடியாக 300 ரூ தரிசன டிக்கெட், சில வருடங்களாகவே வழங்கப் படுவது இல்லை. சர்வ தரிசன டிக்கட் ஆனது கீழ் திருப்பதியில் உள்ள சீனிவாச காம்ப்ளெகஸ்ல் மட்டுமே தரப் படுகிறது. அதற்கும் ஆதார் அட்டை காண்பிக்க வேண்டி உள்ளது.அப்படி தரிசன டிக்கெட் பெறும்போது, தரிசன நேரத்திற்கு 2 நாட்கள் இடைவெளி இருப்பதால் அந்த இரண்டு நாட்களும் அறை எடுத்து தங்கும் செலவு ஏற்படுகிறது. திருமலையில் தனியார் தங்கும் விடுதிகளின் விலை மிகவும் அதிகம். தேவஸ்தான அறைகள் பெரும்பாலும் இணைய தளம் மூலமே பதிவு செய்யப் படுகிறது. நேரடி பதிவு மூலம் அறை கிடைப்பதும் சிரமம். CRO அலுவலகத்தில் மட்டுமே அனைத்து ரெஸ்ட் ஹவுஸ் களுக்கும் அறைகள் பதிவு செய்யப் படுகின்றன. அங்கு செல்வதற்கு இலவச பேருந்து வசதியை பயன்படுத்தலாம். இல்லையென்றால் கீழ் திருப்பதி

ஆலய தரிசனம் - 2/3

Image
குத்தாலம் அருகில் உள்ள பாடல் பெற்றத் திருத்தலங்கள் சிலவற்றைக் காண்பது என முடிவாயிற்று. அதில் முதலில் பார்த்தது குத்தாலம் சொன்னவாறரிவார் திருத்தலம்தான்.  : ஆலயப் புனரமைப்பு பணிகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. சன்னதியின் கல்வெட்டு எழுத்துக்களில் இறைவன் பெயரான `சொன்னவாறரிவார்` (உக்தவாகீஸ்வரர்) என்பதை கண்டுகொள்ள முடிந்தது.  ஜெயங்கொண்ட சோழ வள நாட்டைக் கண்டு கொண்டேன் குலோத்துங்க சோழ வள நாட்டையும் கண்டு கொண்டேன் தஞ்சாவூர் குறிப்பிடப்பட்டு உள்ளது மணவாளப் பட்டன் எழுத்து / நாராயணப் பட்டன் எழுத்து இறைவன் பெயரான சொன்னவாறரிவார் அதிகாலையில் ஆலயம் திறக்கப் பட்டவுடன், இறைவன் அருளால் அடியேனுக்கு நல்ல தரிசனம் கிட்டியது. அந்தத் திருப்தியுடன் அங்கு இருந்து திருவேள்விக்குடிக்கு சென்றேன். திருவேள்விக்குடி:  குத்தாலத்தில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில் உள்ளது திருவேள்விக்குடி.  திருக்குளம் ஆடல் வல்லானது காலை ஆரேனும் அழிக்கவும் இயலுமோ? ராஜராஜ தேவர் பெயரைக் கண்டுகொண்டதில் அற்ப மகிழ்ச்சி ஆளே இல்லாத பிரகாரத்தில் அப்பனும் அடியேனும்.. அம்மன் சன்னதி சுவற்றிலும் ராஜராஜர் பெயர் உள்ளன (எழுத்துக் கூட்டி அதை மட்டுமே ப

ஆலய தரிசனம்-1/3

Image
 அவ்வப்போது பாடல் பெற்றத் திருத் தலங்களுக்கு செல்வது அடியேனின் வழக்கம். சமீபத்தில் அவ்வாறு சென்ற போது, முதலில் தரிசித்த தலம் திருவிடை மருதூர். அதன் சில புகைப்படங்கள் கீழே: திருவிடைமருதூர் : கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள திருக்கோயில். மராட்டிய அரச குடும்பத்து பெண்மணி ஒருவர் தான் மணக்க விரும்பியவரை மணக்க அருள் புரிந்தமைக்காக இத்தலத்து ஈசருக்கு ஒரு லட்சம் விளக்குகள் ஏற்றி வழிபட்டு, விளக்குடன் நிற்கும் தனது உருவத்தை பித்தளையில் செய்து வைத்து இந்த செய்தியையும் எழுதி வைத்து உள்ளார். பட்டினத்தார் துறவியாக வாழ்ந்து வந்தது இத்தலத்தில்தான். அதன் பின்னர் அங்கிருந்து அதே வழித்தடத்தில் செல்லும் பேருந்தில் சென்று திருவாலங்காடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கினேன்.  திருவாலங்காடு ( நாகை மாவட்டம்) :  திருவாலங்காடு என்ற பெயரில் திருத்தணி அருகே ஒரு சிவ ஆலயமுண்டு என்பதால் குழப்பம் ஏற்படாமல் இருக்க மாவட்டத்தையும் குறிப்பிட வேண்டி உள்ளது.  இந்த ஆலயம் மூன்றாம் குலோத்துங்க சோழர் காலத்தில் புகழ் பெற்று விளங்கி இருக்க வேண்டும். இந்த ஆலய ஈசரின் திருவடிகளைத் தம் தலை மீது தாங்கியவாறு குலோ

ஸ்ரீமுஷ்ணம் ஆலயம்

Image
ஸ்ரீ முஷ்ணம் என்றதும் நாம் அனைவரும் பூவராகப் பெருமாள் பற்றி அறிவோம். அரச மர உருவில் இருப்பதாகக் கருதப் படும் பெருமாள் பற்றியும் அறிவோம். ஆனால், பூவராகப் பெருமாள் ஆலயத்தின் மதிலை ஒட்டியவாறு அமைந்து உள்ள சிவன் கோவில் பற்றி பெரிதும் பேசப் படுவதில்லை.  இந்த ஆலயம் மிகவும் பழமையானது என்பது, அதன் செங்கல் சுவரால் கட்டப் பட்டு உள்ள மதில் சுவரைப் பார்க்கும் போதேத் தெரிந்து விடும். பலரும் இந்த ஆலயம் பற்றி தங்களது வலைப் பக்கங்களில் எழுதி உள்ளனர்.  பூவராக சுவாமியைத் தரிசிப்பவர்கள் எத்தனைப் பேர், அந்த ஆலயத்தின் பின்புறம் உள்ள இந்த சிவாலயத்தை தரிசிப்பார்கள் என்பது கேள்விக்குறியே..! (தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் ஆலயம் ) இந்த கோவிலில் சுந்தரர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மானக்கஞ்சார நாயனார் பதிகம் பாடி, இறைவனிடம் விண்ணப்பம் செய்ததாக வரலாறு உண்டு. ஆனால் இந்த ஆலய இறைவனை பற்றிப் பாடப் பட்டத் தேவாரப் பாடல்கள் எதுவும் கிடைத்ததாகத் தகவல் இல்லை.  (சோழர் கட்டுமானம்) மேலும் இரண்டாம்குலோத்துங்க சோழனின் ஆட்சியின் போது, பெருமாள் ஆலயம் மற்றும் சிவன் ஆலயம் ஆகியவற்றிற்கான நிலத்தகராறு ஏற்பட்டு அதனைத் தீர்த்து வைத்ததாக

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

Image
நூலகத்தில் கிடைத்த புத்தகத்தின் பயனுள்ளப் பக்கங்கள்.  பொதுவாக, நமக்கு நாமே வாதாட எண்ணம் கொண்டு இருப்போம். ஆனால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய மனுக்களின் வடிவமைப்பு தெரியாததால் வழக்குரைஞர்களை நாட வேண்டி வரலாம்.  ஆகவே, இந்தப் புத்தகத்தின் பக்கங்கள் நுகர்வோர் மன்றத்தின் மனுக்கள் மாதிரியைத் தருகிறது.  வழக்குரை மாதிரி சான்றுறுதி ஆவணப் படிவம் சீராய்வு மனு நிறைவேற்றுகை மனு வழக்கு தாக்கல் முறை  இவற்றை மாதிரியாகக் கொண்டு நாம் பிற வழக்குகளையும் கையாள முடியும். வாசகர்களின் தேவை அறிந்து தகவல்களை வழங்கிய எழுத்தாளருக்கு நன்றி.

நீதித்துறை சீர்திருத்தம்

Image
இந்திய நீதிமன்றங்களுக்கு 3 மாத கோடை விடுமுறை. இந்த வழக்கம் வெள்ளை துரைமார்களுக்கு வெயில் ஒத்துக் கொள்ளாது என்பதால் ஏற்படுத்தப்பட்டது. இந்திய துரைமார்கள் அதை அப்படியே பின்பற்றுகிறார்கள். இவர்கள்தான் நீதியை நாட்டில் நிலைநாட்டுகிறார்களாம். கேட்டால், நாங்கள் வீட்டில் இருந்தாலும் பணி ஆற்ற வேண்டும் தெரியுமா? என்பார்கள். அதையே அலுவலகத்திற்கு வந்து ஆத்தலாம் இல்லையா?. இவ்வளவு வழக்குகள் தேக்கி வைத்துக் கொண்டு, வெட்கமே இல்லாமல் இவ்வளவு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாமா?. வெள்ளைக்காரர்களின் வம்சமாக இருந்தால் தேவைப்படலாம். இந்திய வம்சாவளிகளுக்கு எதற்கு? ஒரு நாளைக்கு 150, 300 வழக்குகளை விசாரிக்கிறோம் என்பார்கள். அதில் 98% சும்மாவே வாய்தாவை மாற்றி வைப்பதாக இருக்கும். நாம் வழக்குப் பட்டியலைப் பார்த்து விட்டு, அய்யோ பாவம் 'நிதி'பதி கடுமையாக உழைக்கிறார் என்று நினைப்போம். ஒரு நிதிபதி "வீட்டில் அமர்ந்து வழக்கு கோப்புகளைப் படிக்கிறோம், தீர்ப்புகளை வீட்டில் அமர்ந்துதான் வடிக்கிறோம் எங்களுக்கு நேரமே போதவில்லை" என்று எழுதி இருந்தார். படித்தால் சிரிப்பு வந்தது. பாராளுமன்றத்தில